மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாக இருந்த ஸ்ரீதேவியின் திடீர் மரணம் திரையுலக வட்டாரத்தில் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஸ்ரீதேவியின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலவி வருகின்றன. அவர் குளியலறைக்குச் சென்ற போது மயக்கமடைந்து மரணமடைந்தார் என்றே பெரும்பாலானோர் சொல்கிறார்கள். இருந்தாலும் குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்கள்தான் அதிகாரப்பூர்வமானது.
இதனிடையே, ஸ்ரீதேவியின் மரணம் பற்றி நேற்று ஒரு வாட்ஸ்அப் தகவல் ஒன்று வைரலாகப் பரவியது. அதில் ஸ்ரீதேவி அவருடைய அழகைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக செய்து கொண்ட சில உடல் உறுப்பு சிகிச்சைகள்தான் அவருடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தகவலைப் பலரும் ஷேர் செய்தனர்.
ஸ்ரீதேவி அவருடைய அழகுக்காக மூக்கு சர்ஜரி மட்டும் செய்து கொண்டார் என்பது அவருடைய பழைய புகைப்படங்களைப் பார்ப்பது நன்றாகவே தெரியும். அவர் மேலும் மார்பக சிகிச்சை செய்து கொண்டார் என்றும், சமீபத்தில் உதட்டில் கூட சிகிச்சை செய்து கொண்டார் என்றும் பல்வேறு வதந்திகள் பரவியிருந்தன.
அழகுக்காக சில சிகிச்சைகள் செய்து கொள்வது சிலரது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஸ்ரீதேவி அவருடைய உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு திடீர் மரணம் ஏற்பட்டது எதிர்பாராத ஒன்று என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கருதுகிறார்கள்.