மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என, மக்கள் ஒரு போதும் நம்பக்கூடாது; அவர்களை தோற்கடிக்க வேண்டும், என, நடிகர் சத்யராஜ் பேசினார்.
சென்னையில், நடந்த விழா ஒன்றில், அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்; ஏன், நானே, மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல நடிகர்கள் என்பதால், எல்லாம் தெரிந்தவர்கள் என, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள்; அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால், அது, பெரிய தோல்வி அல்ல. வெற்றி பெற்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என, யோசியுங்கள். எனவே, நடிகர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் களம் காண உள்ள நிலையில், அவர்களின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் சத்யராஜ் இவ்வாறு பேசியிருக்கிறார்.