பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இசையமைப்பாளர் - இயக்குனர் என்ற கூட்டணி மிக முக்கியமான கூட்டணி. பாரதிராஜா - இளையராஜா, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என இயக்குனரும், இசையமைப்பாளரும் இணைந்த சில கூட்டணிகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு கூட்டணி இளம் ரசிகர்களை அவர்களது கூட்டணியால் வெளிவந்த பாடல்களில் கட்டிப் போட்டது. அந்தக் கூட்டணி செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி.
திடீரென பிரிந்த அந்தக் கூட்டணி மீண்டும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் மீண்டும் இணைந்தது. ஆனால், அந்தப் படம்தான் எப்போது வெளிவரும் என்று தெரியாமலேயே தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து அந்தக் கூட்டணி சூர்யாவின் 36வது படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்காக மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் செய்து ஒரு அருமையான பாடலை கம்போஸ் செய்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
அது பற்றி மேலும் கூறும் போது, “மூன்று நாட்கள் கடுமையாக கம்போசிங் செய்து கடைசியாக ஒரு அற்புதமான டிராக் செல்வராகவன் படத்திற்காகக் கிடைத்தது... கோல்டன் நாட்கள் திரும்பியது... நீங்கள் மாறவேயில்லை..” என யுவன் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள செல்வராவன், “நீங்கள் மேஸ்ட்ரோ இல்லை, உங்களுடன் இணைந்து நம்முடைய மேஜிக்கை உருவாக்குவது எப்போதுமே ஆனந்தமானது,” எனக் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36வது படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.