மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் |
சென்னையில் நேற்று முன்தினம் இரவு ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தினர் ரவுடிகள். பிரபல ரவுடி பினு என்பவன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறான். வண்டலூர், மீஞ்சூர் சாலை அருகில் நடந்த இந்த ரவுடியின் பிறந்த நாளில் பிரபலமான ரவுடிகள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 75 ரவுடிகளை கைது செய்தனர். சினிமா சம்பவம் போல் நடந்த இந்த ஆக்ஷன் பர்த்டேவை பாராட்டி விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய 75 சமூக விரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதனுக்கும், சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் சர்வேஷ்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். ஐ சல்யூட் தெம்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.