பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கியது. இந்த படத்தின் துவக்கத்திலேயே ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குத்துப் பாடலை படமாக்கினர்.
இதுதான் படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் என்று படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. சென்னையில் நடைபெற்ற முதல்கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோல்கட்டாவில் நடைபெறுகிறது. அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், அதி பயங்கர ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகின்றனர்.
இந்தக்காட்சிகளை சென்னையிலேயே படமாக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டதாம். அதன்பிறகே கோல்கட்டாவில் படமாக்க முடிவு செய்யப்பட்டதாம். கத்தி படத்தின் ஆக்ஷ்ன் பிளாக் கோல்கட்டாவில் படமாக்கப்பட்டது. அப்படம் வெற்றியடைந்தது. எனவே சென்ட்டிமெண்ட் காரணமாக கோல்கட்டாவில் படமாக்க முடிவு செய்தாராம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஸ்பைடர் படத்தின் படுதோல்வி மனுஷனை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது பாருங்கள்?