மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை:நடிகை அமலாபாலுக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த, தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், அமலாபால். இவர், தமிழ், மலையாளம் பட உலகில், முன்னணி நடிகையாக உள்ளார். இயக்குனர், விஜய் என்பவரை, காதல் திருமணம் செய்து, விவகாரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில், சொகுசு கார் வாங்கி, 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன், கொச்சி குற்றப்பிரிவு போலீசார், அமலாபாலை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில், அவர், பிப்.,3ல், மலேசியாவில் நடக்க உள்ள, 'டான்சிங் தமிழச்சி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்காக, தி.நகரில், நடன இயக்குனர், ஸ்ரீதரின் பள்ளியில், நடிகர், நடிகையருடன், நடன ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு வந்த, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த, அழகேசன் என்பவர், அமலாபாலிடம், 'என் நண்பர், மலேசியாவில் உள்ளார்; அவருடன் டின்னர் சாப்பிட வருகிறீர்களா' என, கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அமலாபால், நேற்று, மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் விசாரித்து, அழகேசனை கைது செய்தனர். இவர் தொழில் அதிபர் என, கூறப்படுகிறது.
அமலா பால் கூறுகையில், ''என்னைப்போல, தனியாக இருக்கும், உழைக்கும் பெண்கள், இதுபோன்ற பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது.மற்ற பெண்களுக்கு, இதுபோன்ற பிரச்னை, ஏற்படக் கூடாது என்பதற்காக, புகார் அளித்தேன்,''என்றார்.