மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியது அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்களின் நிஜ வாழ்க்கையை அவர் பேசினார். அவர் பேசியதாவது:
இப்போதெல்லாம் சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். பொதுவாக, மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது. சினிமாகாரர்களை குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.
ஒரு படம் ஓடும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் வேலை செய்கிறோம். படம் எடுக்க முயலும் தயாரிப்பாளரை நாம் பாராட்ட வேண்டும். அந்தப் படம் ஓடவில்லையென்றால் அவருக்குதான் பாதிப்பு. அந்த படத்தை வைத்துக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு வெற்றியை நம்பி பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வருகிற தயாரிப்பாளர்களின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அதற்கான பொறுப்பை உணர்ந்துதான் இங்கு எல்லோரும் படம் பண்ணுகிறோம். அந்த பயமும், பாதுகாப்பும் தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் உள்ளது.
4 படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வரவே மாட்டார்கள். நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்திப் பேசினாலும் கண்டுகொள்ள ஆள் இருக்காது. வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் இங்கு மதிப்பு. பவர் வைத்துதான் இங்கு மரியாதை. அதுவும் போய்விட்டால், நாம் சோர்ந்துபோனால் அந்த இடத்திற்கு இன்னொருத்தன் வருவான்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.