பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படம் தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.
மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்பற்றி சூர்யா கூறுகையில், இந்த படம் அனைவரையும் இம்ப்ரஸ் பண்ணும். அந்த அளவுக்கு நாட்டில் பற்றி எரியும் சில அதிரடியான விசயங்களை இந்த படத்தின் கதையில் வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேசியது நல்ல அனுபவம். தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு மொழியையும் நான் நேசிக்கிறேன்.
மேலும், இந்த படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சூர்யா.