கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நட்சத்திர கலை விழாவிற்காக ரஜியும், கமலும் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினி நேற்றே சென்றுவிட்டார். கமல் இன்று வந்தார். விழா நடக்கும் புக்கிஜாலி ஸ்டேடியத்திற்கு ரஜினியும், கமலும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர். அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது ரசிகர்களிடம் பேசிய கமல், மலேசிய மக்களின் அன்புக்கு நன்றி. இளைஞர்கள்(நடிகர் சங்க நிர்வாகிகள்) மிக அற்புதமாக உழைத்து உள்ளனர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விட வேலையில் கவனமாக இருப்பவர்கள் அதிகம். நடிகர் சங்க கட்டடத்தை ஒற்றுமையாக இருந்து முன்னரே கட்டியிருக்கலாம். இப்போதும் ஒன்றும் குறையில்லை, சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
ரஜினி பேசுகையில், கபாலி படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மலேசியாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. மலேசியா கிட்டத்தட்ட எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டி உள்ளது. பிறகு பேசுகிறேன் என்றார்.