ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இன்றும், நாளையும் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற உள்ளது. இதற்காக பல நடிகர், நடிகைகள், கலைக் குழுவினர் மலேசியாவிற்குப் பயணமாகியுள்ளனர்.
நேற்று மலேசியாவிற்கு சுமார் 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர். ரஜினிகாந்தும் அவர்களுடன் சென்றிருக்கிறார். விமானத்திலேயே அவருடன் பல நட்சத்திரங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அனைவருடனும் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசி புகைப்படம் எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனும் அந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதே சமயம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்து தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரும் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், இந்த கலை விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் எனத் தெரிகிறது.
அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பதை லட்சியமாகவே வைத்திருக்கிறார். அது குறித்து பல முறை சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது அவரைப் போலவே விஜய்யும் நடந்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அஜித் வராத போது தான் மட்டும் ஏன் வர வேண்டும் என அவரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த உள்ளனர்.