முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
சென்னை: தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும்; அதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு, அவருடன் இணைந்து, தமிழகத்தில் இருந்து, ஏழு புதிய குரல் தேடல் என்ற, நிகழ்ச்சியை, 7 அப் நிறுவனம் நடத்துகிறது. பலகட்ட போட்டிகளுக்குப் பின், தேர்வான ஏழு பேருடன், வரும், 12ம் தேதி, சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் பாட உள்ளார்.
இதுகுறித்தும், தற்போதைய தமிழக அரசியல் குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: இசை பயணத்தில், 25 ஆண்டுகளை முடித்து விட்டோமா என, திரும்பி பார்த்தால், வயதானது போலாகி விடும். இனிமேல் தான், நிறைய செய்ய வேண்டியுள்ளது. சென்னையில், இசை நிகழ்ச்சி நடத்துவது சந்தோஷமாக உள்ளது. வரும், 12ல், 99 சதவீதம் தமிழ் பாடல்களையே, மூன்று மணி நேரம் பாடப்போகிறோம்.
எதிர்கால தலைமுறையினருக்கு, யூ -டியூப் போன்ற தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. நான் கூட, சில சமயம் அதிலிருந்து தான், நல்ல குரல்களை தேடுகிறேன். இந்த இசை நிகழ்ச்சியால் கிடைக்கும் நிதி விவசாயிகளுக்கும், கல்விக்கும் பயன்பட உள்ளது. நான் தனிமை விரும்பி என்பதால், அரசியலில் நாட்டமில்லை. ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சை நானும் கேட்டேன்; நன்றாக இருந்தது.