பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சமீபத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற தனியார் நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொண்டார் அதன் தென்னிந்திய விளம்பர தூதர்களில் ஒருவரான மஞ்சு வாரியர். மேலும் நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா, சிவராஜ்குமார் ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு திரும்பியபின், ஷாருக்கான் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
“சினிமாவிலும் டிவியிலும் மட்டுமே பார்த்துவந்த ஷாருக்கானை இப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன்.. ஷாருக் எபெக்ட் என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்றுதான் நேரில் உணர்ந்தேன். நான் உங்களுக்கு நெருக்கமானவளாக உணர்கிறேன். நீங்கள் பாடிய பாடலை புத்தாண்டு பரிசாக எடுத்துக்கொள்கிறேன்” என ஒரு ரசிகையின் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
இந்த நிகழ்வில் மஞ்சு வாரியாரை அருகில் வைத்துக்கொண்டு, ஷாருக்கான் தனது 'தில்வாலே துல்ஹானியா லி ஜயேங்கே' படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலை பாடியதுதான் மஞ்சுவின் இந்த பரவசத்துக்கு காரணம்.