மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்து 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவும் இருக்கிறார். அது மட்டுமல்ல 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை' ஆகிய படங்களை முடித்ததும் தனுஷ் 'மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்திற்கு தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய பழைய நண்பரான யுவன் சங்கர் ராஜாவுக்கு இசை அமைக்கும் வாய்ப்பைக் கொடுத்திவிருக்கிறார் தனுஷ்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்தார். அதன் பிறகு செல்வராகவனுக்கும் யுவனுக்கும் தகராறு ஏற்பட, அது தனுஷையும் பாதித்தது.
இநந்நிலையில், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு 'மாரி-2' மூலம் மீண்டும் தனுஷும், யுவன் சங்கர் ராஜாவும் மீண்டும் இணைகிறார்கள். 'மாரி' படத்தின் முதல் பாகத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். அவருடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு ஷான்ரோல்டனை பயன்படுத்தி வந்தார். ஆனால் விஐபி-2, ப.பாண்டி போன்ற படங்களில் ஷான் ரோல்டனின் இசை பெரிதாக எடுபடவில்லை. இதனால் இப்போது அவரையும் கழற்றி விட்டு மீண்டும் யுவன் கூட கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ்.