மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திருமணத்திற்கு முன்பு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தபோது, கொஞ்சம் கிளாமராகவும் நடித்தார் சமந்தா. ஆனால் இப்போது அவர் நடித்து வரும் எல்லா படங்களிலுமே அவரது வேடம் பேசப்படும் வகையில் உள்ளது. அதாவது, தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் நிருபர் வேடம் என்றாலும், அந்த கேரக்டர் கதைக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம்பெற்றுள்ளது. ராம்சரணுடன் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்தில் ஏழை பெண்ணாக செண்டிமென்ட் ரோலில் நடித்து வருகிறார்.
அதேபோல் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமத்துரை படத்தில் கிராமத்து வேடத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்துள்ளார் சமந்தா. விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை படத்தில் மனநல மருத்துவராக நடித்துள்ள அவர், விஷாலுக்கு சிகிச்சை கொடுத்து அவரை சாதிக்க வைக்கும் ஒரு முக்கியமான நாயகி வேடத்தில் நடித்துள்ளார். ஆக, இப்போது நடித்து வரும் நான்கு படங்களிலுமே வழக்கமான நாயகியாக இல்லாமல் கதையோடு கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமந்தா.