மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
உலக அளவில் இந்திய சினிமா என்றாலே அது ஹிந்தி சினிமாதான் என்ற ஒரு மாயை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்திய நாட்டில் ஹிந்திப் படங்கள் மட்டுமே தயாராவதாக வெளிநாட்டினர் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஹிந்தி படங்கள் மட்டும் இங்கு தயாரிக்கப்படவில்லை. அதற்குப் போட்டியாக பல மொழிப் படங்களும் உருவாகி வருகின்றன என்பதை உலகுக்குப் புரிய வைத்ததில் 'பாகுபலி' படத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு.
'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் இந்தியப் படங்களின் மீதான கவனத்தை ஈர்த்தன. தெலுங்கில் நேரடியாகத் தயாரான 'பாகுபலி' படங்கள் தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேச வைத்துள்ளன. இந்திய அளவிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அப்படி நமது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-ஐயும் 'பாகுபலி' படம் கவனிக்க வைத்திருக்கிறது.
ஐதராபாத்தில் நேற்று நடந்த உலகத் தெலுங்கு மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் 'பாகுபலி' படத்திற்கும் சேர்த்து புகழாரம் சூட்டினார். அவர் பேசுகையில், “ஐதராபாத் ஒரு மென்மையான, கம்பீரமான, “பிரியாணி, பாட்மிண்டன், பாகுபலி” ஆகியவற்றின் நகரம். நாட்டின் சுவையான உணவைத் தரும் நகரம். பாட்மிண்டன் வீரர்களை வரிசையாகத் தரும் நகரம். இந்தியாவின் மென்மையான அதிகாரத்தை வெளிப்படுத்தும் படங்களையும் கொடுக்கும் நகரம்” எனப் பாராட்டியுள்ளார்.
'பாகுபலி' படம் பற்றி ஜனாதிபதியின் பேச்சு, 'பாகுபலி' படக்குழுவினரை பெருமை கொள்ள வைத்துள்ளது.