போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஹன்சிகா மோத்வானி, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி அவஸ்தைக்கு உள்ளானார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி, கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் ஹன்சிகாவுடன் நடிகைகள் அமலாபால், நவ்யா நாயர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கல்லூரி விழாவில் நடிகைகள் பங்கேற்றதால் அந்த நிகழ்ச்சியில், நடிகைகளை காண ஏராளமான பொது மக்களும், மாணவர்களும் கூடினர். அப்போது கூட்டத்தினர் மத்தியில் நடிகை ஹன்சிகா திடீரென்று மாட்டிக் கொண்டார்.
ஹன்சிகாவிடம் கை குலுக்குகின்றனர் என்ற பேர்வழியில் ரசிகர்கள் சிலர் அவரின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்து விட்டனர். இதனால் அவரது உடம்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து ஹன்சிகாவை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.