ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சத்ரியன், நெருப்புடா படங்களுக்குப் பிறகு பக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, நேற்று முன்தினம் தனது இணைய பக்கத்தில் எனது அடுத்த படம் குறித்த தகவலை நாளை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்த விக்ரம் பிரபு, தான் ஒரு துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
அப்படி முதல் நாளே அடுத்த படம் குறித்த டைட்டீலை சூசகமாக அறிவித்திருந்த நிலையில், நேற்று விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் துப்பாக்கி முனை என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அந்த படத்தை தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த துப்பாக்கி முனை படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.