7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. காமராஜர் படத்தை தயாரித்து, இயக்கிய பாலகிருஷ்ணன் இந்தப் படத்தையும் தயாரித்து இயக்குகிறார்.
எம்.ஜி.ஆரின் கேரளா வீட்டில் படப்பிடிப்பு நடத்தவும், அங்கு செயற்கையாக சில அரங்கம் அமைக்கவும், படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.
பாலக்காடு அருகிலுள்ள குழல்மந்தம் எனும் ஊரில் உள்ள எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி அம்மையாரின் பூர்வீக வீட்டையும் அதன் அருகே தனது மனைவிக்காக எம்.ஜி.ஆர் கட்டியுள்ள வீட்டையும் பார்வையிட்டனர். அந்த வீட்டில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்களை இன்றுவரை அவரது உறவினர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அப்பகுதி மக்கள் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பக்தியும் பாசமும் உள்ளவர்களாக உள்ளனர். குழல்மந்தம் பகுதியில் நிறுவுவதற்காக எம்.ஜி.ஆரின் வெண்கலச்சிலை ஒன்றை தங்கள் முயற்சியால் உருவாக்கியுள்ளனர். சிலை நிறுவ கோயம்புத்தூர் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை அருகே இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கூட எம்.ஜி.ஆர் மீது அன்பு கொண்டோரும் வரலாற்று ஆய்வாளர்களும் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டையும் அவரது மனைவியார் வீட்டையும் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்களையும் எம்.ஜி.ஆர் சதானந்தவதி அம்மையாருக்குத் திருமணம் நடந்த சிவன்கோவிலையும் தினந்தோறும் வந்து பார்த்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
அவ்வாறு வருபவர்களுக்காக பாலக்காடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு நினைவகம் ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவ்வாறு அமையவிருக்கும் நினைவகத்திற்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் தரத்தயாராக இருப்பதாக சதானந்தவதி அம்மையாரின் உறவினர்கள் தெரிவித்தனர். தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு அவரது பூர்வீக இடத்தில் நினைவகம் அமைக்க வேண்டும். விரைவில் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார் பாலகிருஷ்ணன்.