கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! |
இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தாலும் வாய்ப்புகள் ஏனோ சுரபிக்கு வரவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு புகழ் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று தனக்கான இடத்தை பிடித்து விட்டார். அட்டாக், ஜென்டில்மேன், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறார்.
அடங்காதே என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வரும் சுரபி. தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள குறள் 388 என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் விஷ்ணு மஞ்சு ஹீரோ. ஜி.எஸ்.கார்த்தி இயக்கி உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திருவள்ளுவர் எழுதிய குறளில் 388-வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதை.