மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை: சினிமா நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமாக கந்து வட்டி அன்பு செழியன் குறித்து நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது : ''பல பைனான்சியரிடம், வட்டிக்கு கடன் வாங்கியுள்ளேன். அதில், அன்பும் ஒருவர். வாங்கிய பணத்தை, வட்டியோடு சொன்ன தேதியில் கொடுக்க, முதன் முதலாக, நான் வாங்கிய வீட்டை கூட விற்றுள்ளேன். நான் சந்திக்கிற பிரச்னைகளை சவாலாகவே எதிர்கொள்கிறேன். 20 லட்சம் ரூபாய் கடனுக்காக, சென்னை, வளசரவாக்கத்தில் இருந்த, 74 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று, வெளியில் வந்து விட்டேன். இன்று, அதன் மதிப்பு, ஏழு கோடி ரூபாய்.
எந்த பிரச்னை இருந்தாலும், சங்கத்துக்கு வாங்க... தீர்த்து வைக்கிறோம் என, சொல்கின்றனர். பிரச்னையில் இருக்கும்போது, தீர்த்து வைக்க முடிகிறதா என்பது, கேள்விக்குறியாக இருக்கிறது. உதவ யார் முன்வருவர் என்பது தெரியாமல் இருக்கிறது.