விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி பல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில மதவாத அமைப்புகள் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகாவின் தலைக்கு பத்து கோடி பரிசு அறிவித்துள்ளன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது:
தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது உடலை விட தலைக்கு அதிக மரியாதை கொடுங்கள். இன்னும் சொல்லப்போனால், அவரது சுதந்திரத்துக்கு மரியாதை கொடுங்கள். அதை பறிக்காதீர்கள். எனது படங்களுக்கு பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது வருந்தத்தக்கது. எழுந்து நில் இந்தியா. இது சிந்திக்க வேண்டிய நேரம். நாம் போதுமான அளவு சொல்லி விட்டோம். இந்தியாவே கவனி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.