மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை த்ரிஷா. கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், இப்போதும் தமிழ், மலையாள படங்களில் பிஸியாக உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
த்ரிஷா, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழகம் மற்றும் கேரள யுனிசெப்பின் தலைவரான ஜாப் ஜக்காரியா அறிவித்துள்ளார். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிராக அவர் குரல் கொடுக்க உள்ளார். .
இதுகுறித்து த்ரிஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்திருப்பதாவது... "இதை மிகப்பெரிய கவுரவமாக உணர்கிறேன். குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தமிழகம் மற்றும் கேரளாவில் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். ஊட்டச்சத்தின்மை இல்லாத மாநிலமாக உருவாக்குவதே என் இலக்கு".
இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.
முதன்முறையாக தென்னிந்திய நடிகை ஒருவர் யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.