மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
நயன்தாரா நடித்த அறம் படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினி, கோபியை போனில் தொடர்பு கொண்டு "அறம் படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. சூப்பரான படம். என்ன இப்படியொரு படம்னு ஆடிப் போயிட்டேன். வாழ்த்துகள். காட் ப்ளஸ் யூ என்று பாராட்டியிருக்கிறார்.
தியேட்டர் விசிட் அடித்த நயன்தரா படத்துக்கு ஆடியன்ஸ் தரும் ரெஸ்பான்சை கண்டு மிரண்டு விட்டார். அன்று மாலையே கோபி நயினாரை அழைத்து அறம் இரண்டாம் பாகத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க உடனே வேலையை ஆரம்பித்து விடலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் உற்சாகமாக இருக்கிறார் கோபி.
அறம் படத்தில் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்யும் கலெக்டர் மதிவதனி மக்களுடன் களம் இறங்கி போராடுகிற அரசியல் போராளியாக இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உலுக்கி பார்க்கிற சப்ஜெக்ட்டாம்.
அறம் படத்தில் காமெடி இல்லை. ஆனால் அறம் இரண்டாம் பாகத்தில் காமெடி இருக்குமாம். சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற படமாக இருக்குமாம். தனது குழுவினருடன் ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணயில் பிசியாக இருக்கிறார் கோபி நயினார்.