விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'பாகுபலி' படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டார் ராணா. கேரளாவிலும் பாகுபலி படம் ராணாவுக்கான விசிட்டிங் கார்டாக மாறிவிட்டது. பாகுபலி முதல் பாகம் வெளியானபோதே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் ராணாவை மலையாளத்தில் நடிக்க வைக்க விரும்பினர். ஆனாலும் நீண்ட நாட்களாக பிடிகொடுக்காமல் இருந்த ராணா, இப்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆம்.. பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்கும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா' என்கிற வரலாற்று படத்தில் மார்த்தாண்ட வர்மாவாக நடிக்க இருக்கிறார் ராணா. திருவாங்கூர் அரசர்களான மார்த்தாண்ட வர்மா மற்றும் கார்த்திகா வர்மா பற்றிய வரலாற்றுக்கதையாக இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.