ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
மத்திய அரசு, கடந்தாண்டு நவ., 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகின. இது அறிவிக்கப்பட்டு ஓராண்டாகி உள்ள நிலையில் மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சியினர் கறுப்பு தினமாக அனுசரித்தினர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை திரையுலகினர் சிலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். நடிகர் கமல் கூட ஆரம்பத்தில் ஆதரித்தவர், இப்போது எதிர்த்துள்ளார்.
இந்நிலையில் நவ., 8-ம் தேதி, "தட்டுரோம் தூக்குறோம்" என்ற பெயரில் "DemonetizationAnthem" பாடல் வெளியானது. கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப்பாடலை சிம்பு பாடியிருந்தார். இதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து இருந்தனர். அதோடு விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஷயத்தை எல்லாம் இணைத்துள்ளனர்.
மத்திய அரசை விமர்சிப்பது போன்று இந்த பாடல் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக பா.ஜ., தரப்பில் சிம்புவிற்கு எதிர்ப்பு கிளம்பலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தி.நகரில் உள்ள சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியிருப்பதாவது... இந்தப்பாடலை நான் எழுதவில்லை, நான் இசையமைக்கவில்லை. இப்படி ஒரு பாடலை பாட சொல்லி கேட்டு என்னிடம் வந்தார்கள். படித்து பார்த்து எனக்கு பிடித்திருந்ததால் நானும் பாடினேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை அந்த பாடலில் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப்பாடல் உருவாக்கப்படவில்லை. இந்த பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை, எனக்கு உண்மை என்று தோன்றியதை துணிந்து சொல்ல நான் என்றும் பயந்தது கிடையாது.
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.