கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது |
அப்பாவைக் கொன்றவர்களை அவரது மகன் பழி வாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள்தான் 'மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள். இது போல இன்னும் பல படங்கள் உள்ளன. 'மூன்று முகம்' படத்தில் அப்பா ரஜினிகாந்த், நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்திலும் அப்பா கமல்ஹாசன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார்.
1982ல் வந்த 'மூன்று முகம்' திரைப்படத்திற்கும், 1989ல் வந்த 'அபூர் சகோதரர்கள்' படத்திற்கும் இடையே கூட ஒரு வரிக் கதையாகப் பார்த்தால் ஒரு ஒற்றுமை உண்டு. போலீஸ் அதிகாரியான அப்பாவை வில்லன் கொன்றதால் அவருடைய மகன்கள் வில்லனைப் பழி வாங்குவதுதான் இரண்டு படங்களுக்கும் பொதுவான கதை.
'மெர்சல்' படம் வந்த போது அதை 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் தழுவல் என்று சொன்னவர்கள்தான் அதிகம். யாரும் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் அதில் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது 'மெர்சல்' படத்தில் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் இருக்கிறது என 'மூன்று முகம்' படத்தை ரீமேக் செய்ய உரிமை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இதனால், அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
முன்னர் வந்த தமிழ்ப் படத்தைத் தழுவி படம் எடுத்திருக்கிறார் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் சரி. அப்படியே ஹாலிவுட் படத்தைத் தழுவி படம் எடுத்தவர்களுக்கும், அடுத்தவர் கதையைத் திருடிப் படம் எடுத்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார்களா ?.