மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் பல இடங்கள் மீண்டும் வெள்ளக்காடாக காட்சியளிக்க தொடங்கியுள்ளன. சில இடங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, கொடுங்கையூரில், ஆர்ஆர்.நகரில், 2 சிறுமிகள் மழையால் சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும், நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் எண்ணூர் துறைமுக கழிமுக ஆக்கிரமிப்பால் வட சென்னைக்கு பேராபத்து என்று சில தினங்களுக்கு முன்னர் கமல் எச்சரிக்கை விடுத்திருந்ததோடு, அந்த பகுதியில் நேரடியாக களமிறங்கி ஆய்வும் மேற்கொண்டார்.