நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானம் ஹீரோவாக நடித்து முடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. வைபவி சாண்டல்யா என்ற மராட்டி நடிகை ஹீரோயின். இவர்கள் தவிர சம்பத், விடிவி.கணேஷ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சிம்பு இசை அமைத்திருக்கிறார் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜி.எல்.சேதுராமன் கூறியதாவது:
சந்தானமும் நானும் லொள்ளு சபா காலத்திலிருந்தே நண்பர்கள். அவருக்காகவே நான் எழுதிய கதைதான் சக்க போடு போடு ராஜா. கதைப்படி சந்தானம் ஒரு பெரிய கோடீஸ்வரன் வீட்டு வாரிசு. தந்தைக்கு பிறகு கோடிக்கணக்கான சொத்துகளை அவர்தான் நிர்வகிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருத்தர் தன் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்று வருகிறபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு இறங்கி அடிப்பார். நட்புக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்பதுதான் படம் சொல்லுகிற செய்தி.
சந்தானம் முதலில் எல்லா பிரச்சினைகளையும் தனது புத்தியை கொண்டு தீர்த்து வைக்க நினைப்பார். அது முடியாத பட்சத்தில்தான் சக்தியை பிரயோகிப்பார். இதனால் டுவிட்ஸ்டான காட்சிகளும் இருக்கும், அதிரடி ஆக்ஷனும் இருக்கும். சந்தானம் ஏற்கெனவே கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டார். இந்தப் படம் இன்னும் ஒரு படி அவரை உயர்த்தி விடும் என்கிறார் சேதுராமன்.