விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
2.0' படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று 27-1017 துபாயில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவையொட்டி '2.0' படக்குழுவினர் துபாய் சென்றுள்ளனர். நேற்று அங்கு '2.0' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அந்த சந்திப்பில் பேசிய இயக்குநர் ஷங்கர் , '2.0' தமிழ் திரைப்படம் இல்லை, உலக அளவில் கவனம் பெறும் விதமாக இந்தியாவில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் தரத்திலான படம்.' என்று பேசியதோடு '2.0' படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை! '2.0'வின் கதை 'எந்திரன்' கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புதிய தகவலைச் சொன்னார்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே எந்திரன்-2 என்றுதான் சொல்லப்பட்டது. இப்போது திடீரென எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று ஷங்கர் அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.
அதன் இரண்டாம் பாகமாக எந்திரன்-2 படம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதும், எங்கள் அனுமதியில்லாமல் எந்திரன்-2 என்று பெயர் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் எங்களுக்கு ராயல்டியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் பெரும் தொகையைக் கேட்டதாக சொல்லப்பட்டது.
அதன் பிறகே 2.0 என்று பெயர் வைத்தனர்.
தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட பட நிறுவனம் கோர்ட்டுக்குப் போக வாய்ப்பிருப்பதால் தான் '2.0' படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் ஷங்கர் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.