'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
டைரக்டர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீசான படம் மெர்சல். இந்த படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராகவும், மத்திய அரசை விமர்சித்தும் இடம்பெற்ற வசனங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளை நீக்க பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என பிரபலங்கள் பலரும் மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியனவும் மெர்சல் படத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இருப்பினும் மெர்சல் வசனங்கள் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அண்ணாநகர் போலீசில், நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளார். அதில், ஜிஎஸ்டி.,க்கு எதிராக பேசிய, வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.