மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் படத்திற்கு ஆளும் பா.ஜ.அரசின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், ஆளும் கட்சியின் பிரமுகர்கள் மெர்சல் படத்தையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கமல் உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ரஜினி இந்த பிரச்சினை குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். ரஜினி பிரதமர் மோடியின் நண்பர் என்பதாலும், ஆளும் பா.ஜ.கட்சியின் ஆதரவு பார்வையில் இருப்பவர் என்பதாலும் ரஜினி கருத்து சொல்லவில்லை. மோடியை எதிர்க்க ரஜினிக்கு துணிச்சல் இல்லை என்று நெட்டிசன்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஜினி நேற்று தனது டுவிட்டரில் மெர்சல் பட விவகாரம் குறித்து அவருக்கே உரிய ஸ்டைலில் கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "முக்கியமான பிரச்சினை பேசப்பட்டுள்ளது. மெர்சல் பட குழுவுக்கு பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரியை மெர்சல் படம் கடுமையாக விமர்சித்துள்ளது. மருத்துவம் வியாபாரமாவதை படம் விமர்சித்துள்ளது. இரண்டும் முக்கியமான பிரச்சினை, மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் சரியானவை என்பது ரஜினியின் கருத்தாக வெளிப்பட்டிருக்கிறது.