மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வசிக்கிறார்கள். இதனால் பெங்களூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களில் மெர்சல் திரையிடப்பட்டது.
பெங்களூர் மற்றும் மைசூரில் மெர்சலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள விஜய் ரசிகர்கள் மெர்சல் வெளியான தியேட்டர்களில் விஜய்க்கு உயரமான கட்-அவுட்கள் வைத்து மாலை அணிவித்திருந்தனர். தியேட்டர்களை தோரணம் கட்டி அலங்கரித்திருந்தனர். பெங்களூர் மல்லேஸ்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கன்னட அமைப்பினர் திரண்டு மெர்சல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்த விஜய் கட்அவுட்களை அடித்து நொறுக்கினர். படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர்.
இதேபோல சம்பிகே தியேட்டர் முன் கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் கோவிந்து தலைமையில் பலர் திரண்டு படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெங்களூருவில் மெர்சல் திரையிப்பட்ட அனைத்து தியேட்டருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல மைசூரிலும் மெர்சல் திரையிடப்பட்ட தியேட்டர் முன் கன்னட அமைப்பினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். பல தியேட்டர்களில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது.