ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் அடுத்தடுத்து இயக்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் ராஜமவுலி. அந்த படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ், தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், ராஜமவுலி தனது அடுத்த படம் குறித்த தகவலை இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அடுத்த படம் குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் 2019-ல் நான் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார். அந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். ஆக, ஸ்பைடர் படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் பாரத் அனே நேனு என்ற அரசியல் படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இந்த படத்தை முடித்ததும் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ராஜமவுலியின் பிரமாண்ட படத்தில் நடிப்பது இப்போதே உறுதியாகிவிட்டது.