'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழக அரசு கடந்த வாரம் தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வை அறிவித்தது. அதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் 160 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. 90 சதவீதம் வரை தனி தியேட்டர்களும், இரு தியேட்டர்களும் உள்ளன. இவற்றிற்கான கட்டண உயர்வு போதாது என்று தனி தியேட்டர்களை வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கேளிக்கை வரி ரத்து, டிக்கெட் கட்டண உயர்வை முறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யவும் முயன்று வருகிறார்கள். ஆனால், இதற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகத் தகவல். தங்களுக்குக் கிடைத்துள்ள டிக்கெட் கட்டண உயர்வு சரியாக இருப்பதாகவும், நாங்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்களாம்.
தனி தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வு மாற்றியமைக்கப்படாத பட்சத்தில் அதன் உரிமையாளர்கள் தீபாவளிக்கு முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகிறார்களாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்களில் சிறிய படங்களுக்கு தியேட்டர்களைத் தருவதில் கெடுபிடி செய்வதால் சிறிய தயாரிப்பாளர்களும் மல்டிபிளக்ஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து நடக்கும் பேச்சு வார்த்தையில் இதனால் இழுபறி நிலைமையே நீடிக்கிறதாம்.