இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பெரிய திரை காமெடி நடிகரும், சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தாடி பாலாஜி, நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். "ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார், தினமும் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்" என்று நித்தியா, தாடி பாலாஜி மீது போலீசில் புகார் அளித்தார்.
"என் மனைவிக்கும் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. என் மனைவியை பயன்படுத்தி என்னை மனோஜ்குமார் மிரட்டி வருகிறார்" என்று தாடி பாலாஜியும் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இருவரையும் நேற்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இருவரும் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்திருந்தனர். இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இருவரும் தங்கள் தரப்பு புகார்களை விரிவாக கூறியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இதில் மனோஜ்குமார் இன்று விசாரிக்கப்படுகிறார்.
"இந்த விசாரணைகளுக்கு பிறகு போலீசார் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பதா அல்லது இருவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதா என்பதை முடிவு செய்வார்கள்" என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.