மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மதுரை, மேலுாரைச் சேர்ந்தவர் கதிரேசன் 66. இவரது மனைவி மீனாட்சி. இவர்களின் மகன் கலைச்செல்வன், 10ம் வகுப்பு படிக்கும் போது மாயமானார். கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் எனவும், அவரிடம் இருந்து பராமரிப்பு தொகை கேட்டும், மேலுார் நீதிமன்றத்தில், கதிரேசன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தனுஷ் மனு செய்தார். தான் கதிரேசன் மகன் இல்லை என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலுார் நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்நிலையில், தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என, மதுரை புதுார் போலீசில் நேற்று, கதிரேசன் அளித்த புகார்:
சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில், 1983 ஜூலை, 28 காலை, 10:30 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமிக்கு, தான் பிறந்ததாக, குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி சான்று வழங்கியதாக, மாநகராட்சி அதிகாரியின் போலி கையெழுத்திட்டு, போலி முத்திரையுடன், உயர் நீதிமன்ற கிளையில், தனுஷ் சான்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த தேதியில், கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்ததாக பதிவு இல்லை. மாநகராட்சியிலும் எந்த பதிவும் இல்லை. மேலும் அந்த வழக்கில், ஆர்.கே.வெங்கடேச பிரபு - தந்தை கிருஷ்ணமூர்த்தி - ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் எனவும், போலி மாற்று சான்றிதழ் தாக்கல் செய்துள்ளார்; இது முற்றிலும் போலி ஆவணம்.
வேறு ஒருவருக்கு உரிமைப்பட்ட, பள்ளி மாற்றுச் சான்றிதழில் பிறந்த நாள் மற்றும் தேதி, சமுதாயம் ஆகியவற்றை மாற்றி, போலி ஆவணம் தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த போலி ஆவணங்களின் அடிப்படையில், ஆர்.கே.வெங்கடேச பிரபு, தந்தை பெயர் ஆர்.கஸ்துாரிராஜா என்றும், அந்த பெயரில் இருந்து, கே.தனுஷ் என்று பெயர் மாற்றம் செய்ததாகவும், 2003 டிச.,10ல் அரசிதழில் வெளியானதாக கூறி, அதையும் தாக்கல் செய்துள்ளனர். மேலும், கிருஷ்ணமூர்த்தி, கஸ்துாரிராஜா என பெயர் மாற்றம் செய்ததாக, அரசிதழ் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனுஷ் பிறந்த நாள், 1983 ஜூலை, 28 என தவறான தகவல் கொடுத்து, ஆதார் அட்டை பெற்றுள்ளார். 2005ல் வழங்கப்பட்டதாக ஒரு போலி ரேஷன் கார்டை தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின் போது, இந்த ஆவணங்களின் நகல் எனக்கு வழங்கப்பட்டது. அதை தீர விசாரித்த போது, அனைத்தும் போலி என தெரிகிறது. மேலும், தன் உடலில் இருந்த அங்க அடையாளங்களில், 10ம் வகுப்பு பள்ளி சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்த கறுப்பு மச்சத்தை, லேசர் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்.
இதற்கு மதுரை மருத்துவக் கல்லுாரி டீன், நீதிமன்றத்திலேயே சான்று அளித்துள்ளார். எனவே, தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து, ஆவணங்களை பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நடவடிக்கை எடுப்பது குறித்து, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.