மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தொடர்ந்து படம் இயக்காமல் அதன்பிறகு அவரும் நாயகனாகி விட்டார். பல படங்களில் தன்னைத்தானே இயக்கிக்கொண்டார். ஆனால் இசை படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுநேர நடிகராகி விட்டார். அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த இறைவி பட வாய்ப்புதான். அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை திருப்பியவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகியிருக்கிறார்.
அதேபோல் தமிழில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு, அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடித்துள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா-விஜய் இடையேயான கிளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்களாக படமாக்கினாராம் அட்லீ. அத்தனை நாளும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாமல் நடித்தாராம் எஸ்.ஜே.சூர்யா. அதைப்பார்த்து அசந்து போன விஜய், ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை மனதார பாராட்டியிருக்கிறார். இதேப்போன்று பல காட்சிகளில் சூர்யாவின் நடிப்பை மனதார பாராட்டியிருக்கிறார் விஜய்.