மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சேதுபதி படத்திற்கு பிறகு நட்புன்னா என்னான்னு தெரியுமா, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். இதுதவிர கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் குருஷேத்ரா என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். தொடர்ந்து தமிழில் புதிய படங்களுக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் ரம்யா நம்பீசனிடத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க முயற்சி செய்கிறீர்களா? என்று கேட்டபோது, முயற்சி செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழில் பீட்சா படத்திற்கு முன்பே நான் நடித்து வந்தபோதும் அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த பிறகுதான் பேசப்பட்டேன். அதேபோல் பீட்சாவுக்கு பிறகு பல படங்களில் நடித்தபோதும் சேதுபதி படத்தில் நடித்தபோது மறுபடியும் பேசப்பட்டேன். ஆக, விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த இரண்டு படங்களுமே என்னை பேச வைத்தன. சேதுபதியில் எங்களது ரொமான்டிக் நடிப்புக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது.
அதனால், விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும்போது கண்டிப்பாக அந்த வாய்ப்புகள் கிடைக்கும் எனறு எதிர்பார்க்கிறேன் என்கிறார் ரம்யா நம்பீசன்.