மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் மோதல் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன். மதுரையில் நடந்த பில்லா பாண்டி படத்தை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது தான் அனைத்துக்கும் காரணமாக இருந்தது. இதனால் சமாதான பேச்சு வார்த்தையின் போது தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஒரு போதும் டெக்னீஷியன் யூனியனை பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் டெக்னீஷியன் யூனியன் பெப்சியிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், தங்களை மீண்டும் பெப்சியில் சேர்க்ககோரி டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ரவிசந்திரன், செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த போராட்டம் தொடர்பாக டெக்னீஷியன் யூனியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்த சம்பளத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 25ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.