விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஸ்ரீ பாவல் மூவீஸ் சார்பில் சுசில் குமார் ஜெயின், ஆர்.உஷா தயாரிக்கும் படம் தெரு நாய்கள். தளபதி ரத்னம் இசை அமைக்கிறார். ஹரீஷ்-சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். புதுமுக ஜோடியுடன் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, பாவல், ஆறுபாலா, மது சூதனராவ், மைம்கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். புதுமுகம் ஹரி உத்ரா இயக்குகிறார். படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது:
நாய்கள் நன்றி உள்ளவை. அதேப்போல ஒரே தெருவைச் சேர்ந்த நண்பர்கள் 5 பேரும் நன்றி உள்ளவர்கள். ஆனால் அவர்களின் நன்றிக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. அந்த துரோகம் விவசாயம் சம்பந்தப்பட்டது. காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் கொடூர கார்பரேட் கம்பெனிகள் வந்து இறங்குகிறது. அதனை ஒரு அமைச்சர் வழி நடத்துகிறார். இந்த பிரச்னையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமைச்சரை கடத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அப்புக்குட்டி தலைமையிலான டீம் அமைச்சரை கடத்துகிறது.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. எல்லோருமே கதை மாந்தர்களாக வருவார்கள். அப்புக்குட்டிக்கு இந்தப்படம் திருப்பு முனையாக இருக்கும். என்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.