மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்துள்ள படம் களவு தொழிற்சாலை. கதிர், வம்சி கிருஷ்ணா, களஞ்சியம், குஷி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷியாம் பெஞ்சமின் இசை அமைத்துள்ளார். டி.கிருஷ்ண ஷாமி இயக்கி உள்ளார். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது. இது சிலை கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள படம். இதுபற்றி இயக்குனர் டி.கிருஷ்ண ஷாமி கூறியதாவது:
களவு தொழிற்சாலை திரைப்படம் தொடர்பாக சில கேள்விகள் இருக்கிறது இது சர்வதேச சிலைகடத்தல்மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா அல்லது,தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தீனதயாளன் என்ற சிலை கடத்தல் நபரை பற்றியதா ,அல்லது சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவை சேர்ந்த காவல் துறை அதிகாரியின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது .
உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படும் சிலைகடத்தல் தொழிலில் ஒரு ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது. இதை படமாக்குவதில் எனக்கும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக ஒரு நெகட்டிவ் கதை களத்தில் படத்தில் விறு விறுப்பான காட்சிகளும், பல அதிரடி திருப்பங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
பரபரப்பான திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இருக்கும், வயலன்சை விரும்பாத சர்வதேச கடத்தல்காரன் ,அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன், அவனை நேசித்தாலும் அவன் செயலை கண்டிக்கும் காதலி, திரைகதையில் அதிரடியாக நுழையும் ஒரு காவல்துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைகளமாக எடுத்துக் கொண்டு, அதில் சஸ்பென்ஸ், காதல் , மற்றும் விறு விறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்புதான் இந்த திரைப்படம். என்கிறார் இயக்குனர் கிருஷ்ண ஷாமி.