7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றிய பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. காற்று வெளியிடை தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் இயக்க இருக்கிறார் மணிரத்னம். ஏற்கெனவே அவர் தயார் செய்து வைத்திருந்த ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போது படமாக இயக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிரத்னம் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.