மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார். இதையட்டி அவரை வானளாவ புகழ்ந்து விஷால் ஆன்தம் என்ற பாடலை தலைவன் வருகிறான் என்ற தலைப்பில் இசை அமைப்பாளர் இஷான் தேவ் வெளியிட்டிருந்தனர்.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதிஞ்”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கியிருந்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஆனந்த், குணா, கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆன்தம் பாடலை கேட்ட விஷால் அதை உருவாக்கியவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார். அவர்களிடம் பேசிய விஷால் “நல்லாருந்துச்சு. ஆனா கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. நான் திரையுலகுக்கு ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும். இனி நான் எப்போதெல்லாம் இலேசாக சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும். இசையமைப்பாளர் இஷான் அருமையான பாடலை எனக்காக உருவாக்கியுள்ளார். அவருக்கும் இதைச்செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி”. என்றார்.