மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையின் மாணவர் ஸ்ரீகண்டன் இயக்கி உள்ள படம் தப்பு தண்டா. புதுமுகங்கள் சத்யா, ஸ்வேதா கய், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை படம் வெளிவருகிறது. இது இன்றைய காலத்துக்கேற்ற பக்கா அரசியல் படம் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன். அவர் மேலும் கூறியதாவது:
இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது. ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும் களப்பணியும் தேவைப்பட்டது. தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர் தான் தப்பு தண்டா. இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நாங்கள் இப்படத்தில் கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
"ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்க முடியாத குற்றம் என்ற கமல்ஹாசனின் வாக்கியம் மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மாநகரம் , ஜோக்கர் போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த தப்பு தாண்டா படத்துக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.