'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் எல்லாம் 40 வயதில்தான் நடிகர்களும், நடிகைகளும் புகழ் உச்சியை அடைவார்கள். 40 வயதைக் கடந்த ஹீரோக்களும், ஹீரோயின்களும் கல்லூரிக்குச் சென்று படிக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். நல்ல வேளையாக கருப்பு, வெள்ளை காலத்துடன் அது முடிவுக்கு வந்தது. 70களின் இறுதியில் யதார்த்தமான சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்றியது.
அதன் பின் டீன்-ஏஜ் வயதில் நடிக்க வந்து முன்னணி கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக அடுத்த சில வருடங்களில் பலர் உயர்ந்தார்கள். ஆனால், இன்னமும் கதாநாயகர்கள் திருமணத்திற்குப் பிறகு நடிக்கலாம், அவர்களை விட மிகவும் வயது குறைந்த நாயகிகளுடன் காதல் செய்யலாம் என்பது மாறாமல் இருக்கிறது. ஆனால், ஒரு நடிகை 30 வயதைக் கடந்தாலே அவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி வந்துவிடுகிறது.
இப்படித்தான் சமீபத்தில் ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கடும் கோபமாக பதிலளித்துள்ளார். “இதே கேள்வியை 50 வயதைக் கடந்த நாயகர்களிடம் போய் கேட்பீர்களா. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்விகள் வருவது பைத்தியக்காரத்தனமானது. திருமணத்திற்குப் பிறகு பெண்களிடம் கிளாமரும், அழகும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது. அப்புறம் எப்படி அந்தப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால், திருமணம் என்பது ஒருவரின் நடிப்புப் பயணத்தை எந்த விதத்திலும் பாதிக்காது,” என்று கூறியுள்ளார்.
ஒரு நடிகையைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் ஏன் 60 வயதைக் கடந்தும் 20 வயது நாயகிகளுடன் டூயட் பாடும் நடிகர்களைப் பார்த்து எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். ஸ்ரேயா கேட்பதும் நியாயம்தானே..?.