விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'மாநகரம்' படத்தில் நடித்த சந்தீப்கிஷன், விக்ராந்த் கதாநாயகர்களாகவும் நடிக்க, சூரி காமெடி வேடத்தில் நடிக்க 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கினார் சுசீந்திரன். சமீபத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
நெஞ்சில் துணிவிருந்தால் படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, 'மெர்சல்' விஜய்யுடன் சுசீந்திரன் மோதுகிறார் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின. விஜய்யை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருக்கும் சுசீந்திரனுக்கு மெர்சலுக்கு போட்டி என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த, அதற்கு விளக்கமளித்துள்ளார்.
''எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதனால் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை, மெர்சலுடன் வருகிறோம். 2013ல் பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் சாரின் 'ஆரம்பம்' படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது!'' என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த 'மெர்சல்' படத்துடன், 'நெஞ்சில் துணிவிருந்தால்', கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மஹாதேவகி', அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.