விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி உள்ளார். ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, லிவிங்ஸ்டன், நாசர் நடித்துள்ளனர், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். "அடி வாடி திமிரா புலியோட்டும் முறமா..." என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யாவே தயாரித்துள்ளார்.
ஒரு ஆவணப்பட இயக்குனர் நடுத்தர வயதை தாண்டிய பெண்களின் பிரச்சினைகளை பேசுகிற ஒரு படம் தயாரிக்கிறார். இதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றுகிறார் என்பது மாதிரியான ஒரு பயணக் கதை. காமெடி, செண்டிமெண்டுடன் குடும்ப பெண்களிள் உளவியல் பிரச்சினைகளை பேசுகிற படம். இதில் ஆவணப்பட இயக்குனராக ஜோதிகா நடித்துள்ளார்.
இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக பல மாதங்கள் ஆகிறது. பண மதிப்பிழப்பு, தியேட்டர் ஸ்டிரைக், பெரிய படங்கள் ரிலீஸ் போன்ற பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிபோடப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது அடுத்த மாதம் 15ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.