ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான தரமணி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. ஐடி பீல்டில் பணியாற்றும் பெண்ணாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதோடு, சில காட்சிகளில் சரக்கடிப்பது, சிகரெட் பிடிப்பது என துணிச்சலாக நடித்திருந்தார்.
இதுபற்றி ஆண்ட்ரியா கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கதாபாத்திரம் பிடித்திருந்தால் இமேஜ் பார்க்காமல் நடிப்பேன். அந்த வகையில் தரமணி படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் அந்த கேரக்டர் சரக்கு அடிக்க வேண்டும், சிகரெட் படிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னபோது அந்த கதாபாத்திரத்திற்காக அப்படி நடித்தேன். அதனால் அதுகுறித்து விமர்சனங்கள் செய்தாலும் எனக்கு கவலையில்லை.
தரமணி படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன், வடசென்னை படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் எனக்கு வித்தியாசமான வேடங்கள் தான். வழக்கமான வேடங்களாக இல்லாமல் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொண்ட வேடங்கள். முக்கியமாக வட சென்னையில் மாறுபட்ட கதாபாத்திரம். ஆண்ட்ரியாவா இது என்று ஆச்சர்யப்படுவார்கள். அப்படியொரு வேடத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆண்ட்ரியா.