'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
லண்டனிலிருந்து வந்து பாலிவுட்டைக் கலக்கிய கத்ரினா கைப் போல் தானும் கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டனிலிருந்து நடிக்க வந்தவர் நிகிஷா பட்டேல். கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்து சசிகலாவின் உறவினரான பாஸ் என்கிற ஜெ.ஜெ.டி.வி பாஸ்கரனுக்கு ஜோடியாக தலைவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு கரையோரம், 7 நாட்கள், நாரதன் ஆகிய படங்களில் நடித்தும்கூட அவரால் முன்னணிக்கு வரமுடியவில்லை.
இந்நிலையில் அவ்வப்போது தெலுங்கில் நடித்து வரும் நிகிஷா பட்டேல் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கே.சி.பொகாடியா தயாரிப்பில், விஜய் ரெட்டி இயக்கத்தில் 1985-ல் ஹிந்தியில் வெளியான படம் 'தேரி மெஹர்பானியன்'.
ஜாக்கி ஷெராஃப், பூனம் தில்லன் நடித்த இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகளாகின்றன. ஹிந்தியில் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ள கே.சி.பொகாடியா 'தேரி மெஹர்பானி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ஆனால் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் இயக்காமல், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்குகிறார் பொகாடியா!
இந்த படத்தில் ஸ்ரீகாந்த், நிகிஷா பட்டேல் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதைக்கும், 'தேரி மெஹர்பானியன்' கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதாம்.