மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி இன்று முதல் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டது. இந்த நிலையில் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது நடந்து வரும் திரைத்துறை சார்ந்த குழப்பங்களுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எந்த வகையிலும் காரணம் இல்லை. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஏற்கெனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சங்கம் நிர்ணயித்த சம்பள விதிகளுக்கு உட்படும் யாருடனும் படப்பிடிப்பை தொடருவோம். பெப்சி தொழிலாளர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. தொழிலாளர் நல வாரிய அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம். பேச்சு வார்த்தையின் முடிவுக்கு பிறகு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.